“பெண் புலி…..”

பாரதி நீ மீண்டும் பிறப்பது சரி!
நீ சந்தோசப்பட இங்கே சில சங்கதி உண்டு!
அம்மி அரைக்கவும் அடுப்பு ஊதவும் பெண்கள் சபிக்கப்பட்டபோது உன் கவிதைத் தேரில் பெண்ணையிருத்தி நீதி கேட்டவன் நீ!
“பட்டங்கள் ஆழ்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினுள் பெண்கள் நடத்த வந்தோம்” என்று மீசை முறுக்கி பெண் விடுதலை தீ வளர்த்தவன் நீ!

திரும்பிப் பாரிங்கே… உன் புருவத்தில் முடிச்சுக்கள் விழும் புகை குழலால் அடுப்பூதியவள் சுடு குழலால் (துப்பாக்கியால்) பகைவன் உயிர் ஊதுகின்றாள்!
முறம் காட்டி புலி விரட்டிய பண்டைத் தமிழச்சியின் வீரத் தொடர்ச்சி இது!

யாரென்று வியக்கின்றாயா பாரதி?
பார் அது தான்
நம்
புலி வேந்தன்
பிரபா
கட்டியெழுப்பிய
பெண் விடுதலைப்
புலிகள்!
பலே பிரபா!
என்று உற்சாகத்தில்
உன் உதடுகள்
உச்சரிப்பது
புரிகிறது!
இன்னும் என்ன
யோசனை?
மீண்டும்
பிறந்து வா
எங்கள்
யாழ் மண்ணிலே
இந்திய
சுதந்திர வேள்வியில்
பாட்டுக்களை
வேட்டுக்கள்
ஆக்கியவனே…
உன் கைவண்ணத்தை
இங்கேயும் காட்டலாம்
வா…
புலி
அமைதியாக இருப்பது
“எதுவும் செய்ய முடியாமையால்”
என்று
தம் அறியாமைக்
காட்டிச்
சீண்டுகிறது
சிங்களச் சேனை!
“எழுக படை”
என தலைவனிடம்
இருந்து வரட்டும்
யுத்த ஆணை…
பதுங்கிய புலி
பாயும்
எதிரியின் உடல்
எம்மண்ணிற்கு
எருவாகும்!
நாளை
கருவாகும்
குழந்தை
உருவாகும்
ஈழத்தில்
ஓடி விளையாடும்
பிழையாக எண்ணாதே
சிங்களமே
ஈரோடு பேனெடுக்கும்
எம் பெண்கள்
கைகள் துவக்கும்
எடுக்கும்
உன் சிங்களச்
சேனையைத்
துவட்டியெடுக்கும்
பாரதி
பாரிது தான்
மாலதி
களம் பல
ஆடிய
புலி மங்கை
வீரம்
கொப்பளிக்கின்ற
கங்கை
தன் கையில்
எடுத்தாள்
துவக்கை
மண்ணில்
அள்ளித் தெளித்தாள்
எதிரியின்
இரத்தச் சிவப்பை
இவள்
கழுத்தில்
நஞ்சு கட்டிய
பெண் சிவன்!
இவள்
பெயர் கேட்டால்
எதிரியவன்
அஞ்சுவான்
களம் பல ஆடி
மண்ணின்
விடுதலைக்காய்
இன்னுயிர்
தந்தாள்
இதயங்கள்
வென்றாள்
மெய் சிலிர்கிறதா
பாரதி?
“பாஞ்சாலி சபதம்”
போல்
மாலதி பற்றி
கவி செய்யலாம்
நீ மீண்டும்
பிறந்து வா
எம்
யாழ் மண்ணில்
மண்ணிற்கு
வரமுன்
சொர்க்கத்தில்
மாலதியைக் கண்டு
ஒரு சேதி
சொல்வாய்
விரைவில்
பிறக்கின்ற
தமிழீழ விடுதலை
நாளிற்கு
தலைவனிடமிருந்து
அழைப்பு
வருமென்று!…

–ஏக்கத்துடன் அண்ணணின் தம்பி பாலா…