emalar

ஆனந்தபுரத்திலிருந்து எவ்வாறு வெளியேறினார் தலைவர்-போராளியின் வாக்குமூலம்(காணொளி)

விடுதலை அல்லது வீரச்சாவு என்ற
தாரக மந்திரத்தை உச்சரித்தபடி ஒவ்வொரு போராளிகளும் ,பொறுப்பாளர்களும், தளபதிகளும் அக்களத்தில் சாதனை படைத்தனர். பல நூற்றுக்கணக்கான இராணுவத்தைக் கொன்று குவித்தனர்.

இவ்வாறான வரலாற்று முற்றுகைச்சமரின் நினைவை முன்னைநாள் பெண்போராளியொருவர் வாக்குமூலமாக நடைபெற்ற முக்கிய விடயங்களை மையப்படுத்தி வெளிக்கொண்டுவந்துள்ளார். அந்த பதிவை உங்களுக்காக இணைக்கின்றோம்.

உண்ண உணவு இல்லை, குடிக்க தண்ணீர் கூட இல்லை அனைத்து உதவிகளும் தடை செய்யப்பட்ட நிலையில் தமக்கேற்பட்ட சோர்வைக் கூட மறந்த நிலையில் தம்மிடம் இருந்த வளங்களை வைத்து சாவின் உச்சகட்டத்தில் கூட தர்மயுத்தம் நடத்தினார்கள். அக்களத்தில் போரிட்ட ஒவ்வொரு வீரர்களுடைய அழிக்க முடியாத வரலாறுகளும் அவர்களுடைய செங்குருதிகளால் அந்த மண்ணில் பதியப்பட்டது.

ஆனந்தபுரம் மண்ணில் எமது தேசியத்தலைமையினை பாதுகாத்து மாவீரர்களான போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், பிரிகேடியர்களை நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.இந்நிலையில் அன்று சிறீலங்காப்படையினரின் கொத்துக்குண்டு, நச்சுக்குண்டு, இரசாயன குண்டு மழைக்குள் நின்று களமாடி மாவீரர்களான வீரர்களையும் அன்றைய காலகட்டபகுதியில் உயிர்நீத்த பொதுமக்களையும் நினைவிற்கொண்டு இம்மாவீரர்களின் ஈகைக்களுக்கு மதிப்பளித்து தொடர்ந்தும் ஈழவிடுதலை பணியினை மேற்கொள்வோம்.

தலைவரின் மறு உருவமே எங்கள் தீபன் அண்ணா

ltte111

தமழீழத்தின் தேவதையாக வந்து பிறந்தவள் எங்கள் துர்க்கா அக்கா…

356

பெண் தெய்வத்தின் மறு உருவமே எங்கள் விதுசா அக்கா…

1627

தமிழீழத்தின் காவல் தெய்வம் எங்கள் கடாபி அண்ணா

bri-kadafi

போர்க்களங்களில் புயலாக நின்ற வீரன் பிரிகேடியர் மணிவண்ணன்

bri- manivannan

ஆனந்தபுர வரலாற்று சமர்களத்தில் இறுதி வரை போராடிய போராளிகள்

சித்திரை மாதம் , 05ம் திகதி மட்டும் நடந்த இந்தச் சமரில் இறுதிவரை எதிரியோடு சமரிட்டு காவியமாகிய 450க்கு மேற்பட்ட மாவீரர்களையும் இந்நாளில் நெஞ்சிருத்தி நினைவு கூறுகிறோம்.

ஆண்டுகள் பல ஆனாலும் அழியாது உங்கள் நினைவுகள் என்றென்றும் உங்கள் நினைவுடன்

“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”

(www.eelamalar.com)