எமது தேசியத்தலைவர் ஒரு தளபதியை தெரிவு செய்வதற்கு அவர்களிடம் எதிர் பாக்கும் சில குணங்கள்…….!!!

01. தன்னைப்போல் தான் மற்றைய போராளிகளையும் பார்க்க வேண்டும்.
02. சட்டம் என்றால் எல்லோருக்கும் அது ஒன்றாக இருக்க வேண்டும்.
03. சொந்தம் பந்தம் எல்லாம் நீங்கள் தளபதியாக இருக்கும் இடத்தில் வைத்திருக்க கூடாது.
04. நான் தளபதி என்ற ஆதிக்கம் இருக்க கூடாது. மற்றவர்கள் அவர்களுக்கு கீழ் என்ற என்னம் இருக்க கூடாது.
05. தன் உயிரை விட தன்னை நம்பி வந்த போராளிகளின் உயிர் முக்கியம் என்ற என்னத்துடன் செயற்பட வேண்டும்.
06. தான் எடுப்பது தான் முடிவு என்று செயற்படக்கூடாது மற்றைய போராளிகளின் ஆலோசனை கேட்டு செயற்பட வேண்டும்.
07. ஒரு தாக்குதலுக்கு தாயாரானால் ஒரு தடவை அல்ல பத்து தடவைகள் யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
08. சொந்த மக்களை தங்கள் உயிர்களை விட மேலாக நினைக்க வேண்டும்.
09. தாயக மண்ணை மீட்பதே எப்போதும் குறியாக இருக்க வேண்டும்.

நான் அறிந்த தளபதிகள் இப்படியான குணங்களிலே இருந்தார்கள் அதனால் தான் நான் நினைக்கின்றேன் அவர்களை எம் தலைவர் தளபதிகளாக வைத்திருந்திருக்கின்றார் என்று.

யாழ்காந் தமிழீழம்.

(www.eelamalar.com)