“சதித்திட்டம் தீட்டுவதில் மஹிந்த திறமையானவர்”
அரசாங்கத்தை கவிழ்ப்பதாக தெரிவித்துவரும் மஹிந்தவை குறைத்து மதிப்பிடக்கூடாது. சதித்திட்டம் தீட்டுவதில் அவர் திறமையானவர். அதனால் அரசாங்கம் எச்சரிக்கையுடன் செயற்படவேண்டும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.