இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் –வைகோ

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக, ஐ.நா. சபை சார்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். சென்னையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வெர்னறில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இலங்கைப் போர்க் குற்றம் தொடர்பாக நீதி விசாரணை இல்லை என்று சொல்லி விட்டனர். ஆனால், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படவேண்டும். அதற்கு ஐ.நா. சபை சார்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வைகோ குறிப்பிட்டார்.

(www.eelamalar.com)