தமிழீழத்தில் காளியம்மன்!

திருநெல்வேலி காளியம்மன் அலங்காரத் திருவிழாவில், தமிழீழத்தில் காளியம்மன் இருப்பதுபோல் சித்தரித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக, ஆலய நிர்வாகத்தினர், பூசகரை இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணைக்கழைத்துள்ளனர்.

திரு­நெல்­வேலி ஸ்ரீ காளி அம்­மன் ஆலய வரு­டாந்த அலங்­கா­ரத் திரு­விழா நடை­பெற்றுவரும் நிலையில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற 3ஆம் நாள் திருவிழாவின்போது காளி அம்­மன் புலி வாக­னத்­தில் தமிழீழத்தில் வலம்வரும் வகை­யில் அலங்­க­ரிக்­கப்­பட்டு அடி­ய­வர்­க­ளுக்கு காட்­சி­ய­ளித்­தார்.

குறித்த படம் மற்றும் காணொளிகள் ஊடகங்களில் பிரசுரமானதையடுத்து தற்போது புலனாய்வாளர்கள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.