பிரபாகரனை விட விக்னேஸ்வரன் ஆபத்தானவர் –பொது பல சேனா
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவை, விடுதலைப் புலிகள் அமைப்பை வி்டவும் ஆபத்தானது என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
புறக்கோட்டையில் 18.02.17 இடம்பெற்ற அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்ண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை விடவும், விக்னேஸ்வரனின் இந்த அரசியல் முன்னணி மிகவும் பயங்கரமானது. பிரபாகரன் இருந்த காலத்தில் எமக்கான அச்சுறுத்தல் என்னவென்று தெரிந்தது.
எனினும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மிகவும் தீவிரமாக சர்வதேச ரீதியில் அவர்களது பிரிவினைவாதத்தை வெற்றிகொள்ள செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். தெற்கில் அரசாங்கம் ஆட்சி செய்துகொண்டிருப்பதாக கூறினாலும் வடக்கில் அரசாங்கத்தின் ஆட்சி நடைபெறவில்லை. வடக்கில் சிங்களவர்களின் வாழ்வதற்கான உரிமை இல்லாமல்போயுள்ளது. கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்த சிங்களவர்களை துரத்தயடிக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.