வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்!

கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் உடனடியாக வெளியேறவேண்டுமெனக் கோரி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இன்று இரண்டாவது நாளாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தனது உணவுத் தவிர்ப்புப் போராட்டம் குறித்து சிவமோகன் கருத்துத் தெரிவிக்கையில்,

மக்களின் காணிகளை சட்டத்துக்கு முரணாக அபகரித்த இராணுவத்தின் நடவடிக்கைகளை மாவட்டசெயலாளரும், பிரதேச செயலாளரும், அரசுக்கு தெரிவிக்க பின் நிற்பது கவலைக்குரிய விடயமாகும். ஆண்டாண்டு காலமாக ஆண்டுவந்த காணியை அற்ப சொற்ப காரணம் காட்டி அரசுக்கு தாரை வார்க்க முற்படுவது முந்தானை பிடித்து தமது பதவிகளை தக்கவைக்க முயற்சிப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசு அதிகாரிகளின் தவறான நடவடிக்கையின் காரணமாகத்தான் மக்கள் தொடர் போராட்டத்திலும் உணவு, நீர் ஒறுப்பு போராட்டத்திலும் குதித்து அரசியல்ரீதியான தீர்வை கோரி நிற்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(www.eelamalar.com)