14

கலியுகத்தில் அதிசயம் நிகழ்த்தும் வற்றாப்பளை கண்ணகி அம்மன்

31

பூகோ­ளச்­சு­ழற்­சியில் வரு­டங்கள் கழிந்து பல யுகங்­களை இந்­தப்­பூமி சத்­தித்­தி­ருக்­கின்­றது. அந்த வகையில் தற்­போது நடப்­பது கலி­யுகம் என்பர். இந்தக் கலி­யு­கத்தில் விஞ்­ஞான வளர்ச்­சியால் மெய்ஞ்­ஞானம் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­தாக வாதி­டுவோர் பலர் உண்டு. எனினும் இந்த யுகத்தில் இந்த தசாப்­தத்­திலும் கூட தன்­னு­டைய அற்­பு­தங்­களால் தனது உண்­மை­யை உல­கிற்கு எடுத்­துக்­காட்டிக் கொண்­டி­ருக்­கின்றாள் வற்­றாப்­பளைக் கண்ணகியம்மன். வற்­றாப்­ப­ளை­யிலே கண்­ணகி அம்மன் வந்­த­மர்ந்த வர­லாற்றை வற்­றாப்­பளை கண்­ண­கி­யம்மன் வராற்றுச் சிந்து பின்­வ­ரு­மாறு எடுத்­து­ரைக்­கி­றது:–

அரி­ய­தொரு வைகாசி விசாக பூர­ணையில்
அழ­கான மாட்­டி­டையர் கண்ணில் வெளி­நின்றாய்
உள்­ள­படி பசி­ய­திக மென்­றனுக் கென்றாய்
உற்­றவன் தலை­மீது பேன­திக மென்றாய்
பிள்­ளை­க­ளு­மப்­போது பிரி­ய­மு­டனே தான்
பேரான தலை­ய­தனைப் பிளகாய் வகிர்ந்து
அழ­கான தலை­ய­தனை அவர்­களும் பார்த்து
அங்­கவர் கண் கண்­ட­னரே ஆயிரம் கண்கள்

என்று வரு­கின்ற பாட­ல­டிகள். உப்பு நீரில் விளக்­கேற்­றப்­பட்­டதை பின்­வ­ரு­மாறு கூறு­கின்­றன.

அன்­னையே அமு­தைப்­ப­டைத்து விட்­டோமே
ஆன தோர் விளக்­க­வில்லை அந்­தி­யு­மாச்சே
என்று கூறக்­கேட்டு இயம்­பினாள் அம்மன்
நூலான திரிச்­சீலை யொன்­றை­த­னை­யிட்டு
நுவ­ல­ரிய நீர்­வி­ளக்­கேற்­றி­னா­ரப்போ
நீரால் விளக்­கெ­ரியும் விந்­தை­யது கண்டு
நின்­ற­வர்கள் கிழ­வி­த­னை­யங்கு காணாமல்…

இவ்­வாறு உலக மாதா­வா­கிய உமை­யம்­மையார் கொடுங்­கோ­ல­னா­கிய பாண்­டிய மன்­னனை அழிக்க கண்­ண­கி­யாக அவ­தா­ர­மெ­டுத்து அதர்­மத்தை அழித்த பின் தானாக விரும்பி வந்­த­மர்ந்த இட­மாக வற்­றாப்­பளை சிறப்புப் பெறு­கின்­றது. அன்னை வந்­த­மர்ந்த அந்த வைகாசி மாத விசாக நட்சத்தி­ரமும் பூர­ணையும் கூடிய திங்­கட்­கி­ழ­மையில் தான் ஆண்­டு­தோறும் பொங்கல் உற்­சவம் நடை­பெ­று­கின்­றது. அந்த வகையில் இவ்வருடமும் ஜூன் மாதம் முதலாம் திகதி இந்த உற்­சவம் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த ஆல­யத்தில் நடை­பெற்ற அதி­ச­யங்­களை பின்­வரும் பாடல் எடுத்­து­ரைக்­கி­றது.

பண்டு பாலர்க்குக் காட்சி கொடுத்­ததும்
பழைய வேப்பம் படவாள் தளிர்த்­ததும்
வண்டு மேவு பனிச்­சை­ய­தா­டலும்
வன்­ப­றங்­கியைக் காயா­லெ­றிந்­ததும்
மொண்டு நீரில் விளக்கை யெரித்­ததும்
மோது குட்ட ரோகந்­தனைத் தீர்த்­ததும்
கண்டு பற்­றக்­கள்ளன் கண் கவர்ந்­ததும்
கருது சிற்­ப­னுக்கே கண்­க­ளீய்ந்­ததும்
அண்டர் போற்­றுமுன் ஆயி­ரங்­கண்­களை
அன்று பிள்­ளைகள் காணக் காண்­பித்­ததும்
விண்­டெ­ழுந்­திரு வேப்­ப­ம­ரத்­தினால்
மேவு பேய் பிணி போய் வுறத்­தீர்த்­ததும்
மண்டு மாமலை தன்னி­னைந்து நீ
மடங்க டோன்ற வர­ம­ளித்­திட்­டதும்
கொண்டு நந்­திக்­க­டற்­கரை கோயிலாய்
குலவு கண்­ண­கை­யற்­பு­தங்­கோ­டியே

இதில் ஆல­யத்தில் திரு­டிய கள்வன் பார்­வை­யி­ழந்­தது 1972 இல். அதன்பின் நடந்த அற்­பு­தங்கள் நிறைய உண்டு. 2004 இல் சுனாமி அனர்த்­தத்­தினால் தீர்த்­த­மெ­டுக்கும் கடற்­க­ரையின் அடை­யாளம் சிதைந்து போனது. சரி­யான இடத்தை தேடிய பரி­பா­லன சபை­யி­னர்க்கு அலை­களை நிறுத்தி ஆழ் கடலில் இடத்தை அறி­யச்­செய்த அற்­புதம் நினைக்கும் போதே மெய்­சி­லிர்க்க வைக்கும் ஒன்று. அதுமட்­டு­மல்ல 2008இல் விஜ­ய­த­சமி விழா நடந்துகொண்­டி­ருந்த போது அம்மன் திரு­வூஞ்­சலில் இருந்து வீழ்ந்து இடம்­பெ­யர்வை குறியீ­டாகக் காட்­டி­யதும் அதே­போல மீண்டும் மீள்­கு­டி­யேற்றம் நிகழ்­வ­தற்­காக மக்­க­ளில்லா வேளையில் ஆல­யத்­தைப் ­ப­ரி­பா­லித்த பாது­காப்புப் படை­யி­னருக்கு காட்­டிய அறி­கு­றி­களை நினைக்­கும்­போது மெய்­சி­லிர்க்க வைப்­பவை.

இவ்­வாறு கலி­யு­கக்­ கண்­ண­கியாய் காட்சி தரு­கின்றாள் எங்கள் தாய். அவளை நம்­பி­ய­வர்கள், தூயமனதுடன் பிரார்த்தித்தவர்கள் துன்பப்பட்டதாக வரலாறே கிடையாது. நம்பினால் நேர்வந்து வாய்பேசும் தெய்வம் அவள். இந்த வைகாசி விசாகப்பொங்கலில் சமுதாயத்தை அரித்தெடுக்கும் சமூக விரோதிகள் அழியவும் நல்லறம் தழைக்கவும் அவளைப் பிரார்த்திப்போம். அதர்மத்தை அழிப்பதற்காக அவள் காற்சிலம்பை கையிலெடுக்க பிரார்த்திப்போம்

க. ஜெயவீரசிங்கம்
(உப– தலைவர், ஆலய பரிபாலன சபை)