ஸ்ரீ பள்ளையப் பேச்சியம்மன்
வாழைச்சேனை ஸ்ரீ பள்ளையப் பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் தீ மிதிப்பு மற்றும் தீர்த்தமாடும் உற்சவம் என்பன கடந்த திங்கட்கிழமை நடைபெற்றன. கடந்த 11ம் திகதி ஆரம்பமான சடங்கு உற்சவம் பதினொரு நாட்கள் இரவு பகல் பூசைகள் இடம்பெற்று திங்கட்கிழமை தீ மிதிப்பு மற்றும் தீர்த்தமாடும் உற்சவத்துடன் நிறைவுபெற்றது.
இத்தீமிப்பு உற்சவத்தில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவு செய்தனர். இதன்போது தீர்த்தமாடும் நிகழ்வு ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி கல்குடா வீதி வழியாக வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம் சென்று பின்னர் வாழைச்சேனை இந்து சமூத்திரத்தில் தீர்த்தமாடும் உற்சவம் நடைபெற்றது. இச்சடங்கு கால பூசைகள் யாவும் ஆலய பிரதம பூசகர் சிவஸ்ரீ.எஸ்.சண்முகம் ஐயர் தலைமையில் நடைபெற்றது. பூசைகள் முடிவுற்றதும் இறுதியில் அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.